பெரம்பலூர், நவ.23:ஆய்வுப் பணிகளுக்காக தமிழக முதல்வர் வருகையை முன் னிட்டு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் புதூய்மைப் பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி ஆணையர் குமரிமன்னன் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வினை மேற் கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 25ம் தேதி பெரம்பலூர் வருகை தர இருக்கிறார். பெரம்ப லூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு பணிகளையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் முழுமையும் தூய்மைப்படு த்தப்படும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.