திருச்சுழி, நவ. 23: திருச்சுழி அருகே கனமழையால் கண்மாய் நீர் நெல்வயலுக்குள் புகுந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். எனவே, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். திருச்சுழி அருகே ஆனைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட மூதிரை மொழிந்தான் கிராமத்தில் விவசாய நிலத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஆனைகுளம், சொக்கநாதபுரம் ஊரிலுள்ள கண்மாய் நிறைந்து வருகிறது.