திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய முறையில் விடுமுறை வழங்கப்படுவதில்லை எனவும் நீண்ட காலமாக புகார்கள் இருந்து வருகின்றன. அதிலும் தற்போது கொரோனா பரவல் காலத்தில் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்தது மட்டுமல்லாமல், ஓய்வின்றி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றும் 982 போலீசாருக்கு வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கவேண்டும் என தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.