ேவலைநிறுத்தத்தை விளக்கி கம்பம், போடியில் ஆர்ப்பாட்டம்

கம்பம், நவ. 22: நவ.26ம் தேதி நடக்கவிருக்கும் பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்து கம்பத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏஐடியூசி மாநில துணைத்தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் முருகேசன், ஏரியா செயலாளர் ஜெயன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் அஜ்மல்கான், எஸ்டிடியு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி, டியூசிசி மாவட்ட செயலாளர் அறிவழகன் முன்னிலை வகித்தனர்.

மோட்டர் வாகன சட்டத்தை திரும்ப பெறவும், ஏழ்மையில் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதே போல போடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: