காளையார்கோவில், நவ.22: காளையார்கோவிலில் வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. காளையார்கோவிலில் வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இலக்கிய அணி தலைவர் முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், ஜோன்ஸ் ரூசோ ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ பேசுகையில், முகவர்கள் நவ. 22 மற்றும் டிச. 12, 13 ஆகிய தேதிகளில் நடக்க உள்ள சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு புதிய வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் நீக்கல் திருத்தம் செய்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது என்றார்.