விபத்தில் வாலிபர் பலி

சிங்கம்புணரி, நவ.21: சிங்கம்புணரி அருகே கல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த 8 பேர் மினிவேனில் நேற்று குலதெய்வ வழிபாட்டுக்காக   தெக்கூர் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.  முறையூருக்கு அருகே வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த பனைமரம் மீது மோதியது. இதில் வேனில் பின்புறம் நின்றுகொண்டு வந்த ஆறுமுகம் மகன் ஆனந்த்(20) படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து  தொடர்பாக வேன் டிரைவர் சங்கர் மீது எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: