24ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர், நவ. 21: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 24 ந் தேதி இணைய வழி மூலமாக நடைபெறுவதாக கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24 ம் தேதி காலை 11 மணி அளவில் கலெக்டர் சாந்தா தலைமையில் ஜூம் செயலி மூலம் இணைய வழி வழியாக நடைபெற உள்ளது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் ஜூம் செயலி மூலம் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இணையவழி மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Related Stories: