தங்கப்பழம் மருத்துவக் கல்லூரியில் தேசிய இயற்கை மருத்துவ தினவிழா

நெல்லை, நவ.20: வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் ஆராய்ச்சி மையம், மத்திய அரசின் தேசிய இயற்கை மருத்துவ மையம் இணைந்து 3வது தேசிய இயற்கை மருத்துவ தினவிழா கொண்டாடப்பட்டது. தங்கப்பழம் கல்வி குழும நிறுவனர் தங்கப்பழம் தலைமையில், தாளாளர் முருகேசன் முன்னிலையில் உஷா, கோ.சித்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினர். மருத்துவக்கல்லூரி முதல்வர் சவுந்திரபாண்டியன் வரவேற்றார்.

விழாவில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர் மேலும் பாரம்பரிய இயற்கை உணவு கண்காட்சி அமைத்திருந்த மாணவர்களுக்கு நினைவுப்பரிசு  வழங்கப்பட்டது. விழாவில் பொதுமக்கள் அனைவருக்கும் பாரம்பரிய அறுசுவையுடன் மதிய உணவு வழங்கப்பட்டது. இயற்கை மருத்துவ தின இலவச முகாம் மூன்றாவது நாளாக நடைபெற்றது. விழாவில் பங்குபெற்ற பொதுமக்களுக்கு இலவச ஆலோசனை, சிகிச்சை அளிக்கப்பட்டது. தலைமை மருத்துவ அதிகாரி மணிவண்ணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மருத்துவர்கள், நிர்வாக அலுவலர்கள் செய்தனர்.

Related Stories: