பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், நவ.20: நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள  பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக பிஎஸ்என்எல்லில் 4 ஜி சேவையை தொடங்காமல் இருப்பதை கண்டித்தும், 15 மாதங்களாக ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருப்பதை கண்டித்தும், முறையாக சம்பளம் வழங்காமல் இருப்பதை கண்டித்தும்  இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு லெட்சுமணபெருமாள் தலைமை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் ராஜீ, அச்சுத ஆனந்த் ஆகியோர் பேசினர்.

Related Stories: