சேத்துப்பட்டு, நவ.13: சேத்துப்பட்டில் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி கேட்டு தமுமுகவினர் பொதுமக்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேத்துப்பட்டு பேரூராட்சி 11வது வார்டு கோட்டைமேடு தெருவில் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து நேற்று தமுமுகவினர் மற்றும் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து, பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.