நாகை,நவ.13: இயற்கை விவசாயத்தை விரிவாக்க ஊக்க தொகைகள் வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் பிரவீன்பிநாயர் தெரிவித்துள்ளார். இயற்கை விவசாயத்தை விரிவாக்க விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்துவதால் மண்ணின் வளம் குறைந்து மலட்டு தன்மை ஏற்பட்டு சுற்றுச்சூழல் அதிக அளவு பாதிக்கப்படுகிறது. ரசாயன உரத்தை அதிக அளவில் பயன்படுத்துவதால் காய்கறி மற்றும் பழங்களில் நச்சுத்தன்மை அதிக அளவு படிந்து விடுகின்றது. இதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு உடல் உபாதைகள் மற்றும் நோய்களும் ஏற்படுகின்றன.