தொண்டி, நவ.13: தொண்டி, நம்புதாளை, எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட வனப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் விலங்குகள் மற்றும் பறவைகள் ஊருக்குள் வரும் போது விபத்து ஏற்பட்டு பலியாகிறது. இதைத்தடுக்க வனப்பகுதியில் தண்ணீர் தடாகம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.பி.பட்டிணம், மங்கலக்குடி, தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட வனப்பகுதியில் மான், மயில் உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் வசித்து வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக போதிய மழை இல்லாததால் கண்மாய் மற்றும் குளங்கள் அனைத்தும் வறண்டு காணப்பட்டது. இதனால் காட்டில் வசிக்கும் பறவை மற்றும் விலங்குகள் தண்ணீருக்காக ஊருக்குள் வருகிறது. அவ்வாறு வரும் போது வாகனம் மோதி இறக்கிறது. சமூக விரோதிகளாலும் வேட்டையாடப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து பகுதியிலும் நல்ல மழை பெய்துள்ளது.