கூடலூர், நவ.13: கூடலூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடலூர் ரேஷன் கடைகளில் அரிசியை தவிர கோதுமை, சர்க்கரை, பருப்பு, உளுந்து, மண்ணெண்ணெய் , எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் முழுமையாக கிடைப்பதில்லை. 1ம் தேதி 10ம் தேதிக்குள் பொருட்கள் வாங்குபவர்களுக்கு இவை கிடைத்தாலும் அதிலும் முழுமையாக சில பொருட்கள் கிடைப்பதில்லை. இதற்காக ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து அலைய வேண்டி உள்ளது. குறிப்பாக, ரேஷன் கார்டுகளுக்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.