பொள்ளாச்சி, நவ.13: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் நடந்த வாரச்சந்தைக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வெள்ளாடு, செம்மரி ஆடு என சுமார் 500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆடுகளை வாங்க வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்புடன் காணப்பட்டது. இதில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், 25 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று ரூ.22 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை என தரத்திற்கேற்ப விலைபோனது. அதுபோல் நேற்று நடந்த வாரசந்தை நாளில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும்.