மயிலாடுதுறை, நவ.12: மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் வரை மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ரயில் வழிப்பாதையை முற்றிலும் மின்மயமாக்கும் பணிகளை ரயில்வே துறையினர் மும்முரமாக செய்து வருகின்றனர். விழுப்புரத்திலிருந்து கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் வரையிலும், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வரை என 228 கி.மீ தூரத்திற்கு மின்மயமாக்கும் பணியை ரூ.250 கோடி மதிப்பீட்டில் ரயில்வே நிர்வாகம் ரயில்வே விகாஸ் லிமிடெட் செய்து வருகிறது. திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வரை மின்மயமாக்கல் பணிகள் முடிவு பெற்று ரயில் சேவை துவங்கப்பட்டுவிட்டது.