வரி விளம்பரங்கள் கிராம வளர்ச்சி திட்டம் தயாரிக்கும் அலுவல் கூட்டம்

திருச்சி, நவ.9: அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 2021-22ம் நிதி ஆண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டங்கள் தயாரிப்பதற்கு மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் படி மக்கள் திட்டத்திற்கான விழிப்புணர்வு பிரசாரம் நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளது. அனைத்து ஊராட்சிகளும் சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் வளர்ச்சி அடைவதற்கு கிராம ஊராட்சியின் வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியது முக்கியமாகும். கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல் தொடர்பாக 25 துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசுகையில், ‘திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக பொதுமக்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் கிராம வளர்ச்சி திட்டம் தயார் செய்ய அந்தந்த துறைகளில் உள்ள திட்டங்கள் குறித்த விபரம் அவ்வூராட்சியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன எனவும், என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்பதையும், பொதுமக்கள் அறியும் வகையில் பொதுமக்களுக்கான திட்ட முகாம் வரும் 23ம் தேதி முதல் 12.1.2021 முடிய நடைபெற உள்ள கிராம ஊராட்சி கூட்டத்தில் தங்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

Related Stories: