ஈரோடு, நவ. 9: ஈரோட்டில் தனியார் செல்போன் கேபிள் இணைப்பு கொடுக்கும்போது, உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் மின் சாதன பொருட்கள் நாசமாகின. ஈரோடு சம்பத் நகர் அருகே உள்ள அருணாச்சலம் வீதியில் நேற்று முன்தினம் தனியார் செல்போன் நிறுவனத்தின் அதிவேக இணையதள வசதிக்காக வீடுகளுக்கு பைபர் கேபிள் பொருத்தும் நடந்து வந்தது. இந்த பணியில், பவானியை சேர்ந்த பெரியசாமி மகன் மோகன் (23) என்பவர் ஈடுபட்டு வந்தார். இதில், அருணாச்சலம் வீதியில் வசிக்கும் வழக்கறிஞர் துரைசாமி என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு அருகே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இணைப்பு கொடுப்பதற்காக, பைபர் கேபிளை அங்கிருந்து தூக்கி வீசியுள்ளார். அப்போது, அந்த கேபிள் சாலையோரம் இருந்த உயர் அழுத்த மின் கம்பியில் மோதி நின்றதால், மோகன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.