மாயனூர் அருகே பரபரப்பு போலீஸ்காரரிடம் தகராறு 2 பேருக்கு வலை

கரூர், நவ. 6: கரூர் மாவட்டம் மாயனூர் அருகே தகராறு நடைபெற்ற இடத்துக்கு சென்ற போலீஸ்காரரிடம் தகராறில் ஈடுபட்ட இருவரை மாயனூர் போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் மாயனூர் அடுத்துள்ள மணவாசி பகுதியில் நேற்று முன்தினம் மாலை தகராறு நடைபெறுவதாக மாயனூர் காவல் நிலையத்துக்கு புகார் வந்தது. இதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு மாயனூர் காவல் நிலைய காவலர் ஆறுமுகம் என்பவர் சென்ற போது, தகராறு நடைபெற்ற பகுதியில் குடிபோதையில் நின்று கொண்டிருந்த இரண்டு பேர், ஆறுமுகத்திடம் தகராறில் ஈடுபட்டு விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இது குறித்து எஸ்ஐ ஒருவரின் புகாரின் பேரில் மாயனூர் போலீசார் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட பிச்சைமுத்து, மதன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: