தாந்தோணிமலை அருகே 4 மாத குழந்தையுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

கரூர், நவ. 4: கரூர் தாந்தோணிமலை அருகே 4 மாத குழந்தையுடன் மனைவி மாயமானதாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் ஆனூர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் பழனிசாமி(28). இவர் தாந்தோணிமலை காவல்நிலையத்தில் அளித்த புகாரில், தாந்தோணிமலை முத்துலாடம்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்த தனது மனைவி, நான்கு மாத ஆண் குழந்தையுடன் கடந்த 1ம்தேதி முதல் காணவில்லை என தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Related Stories: