திருவள்ளுர், நவ.1: திருவள்ளுர் ஜே.என்.சாலை, பூமாலை வளாகத்தில் கோ-ஆப்டெக்ஸ் சார்பில் தீபாவளி சிறப்பு கண்காட்சியை கலெக்டர் பா.பொன்னையா நேற்று துவக்கி வைத்து, புதிய ரக ஆடைகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி சிறப்பு கண்காட்சி என்ற பெயரில் கைத்தறித் துணிகளின் கண்காட்சி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நடத்த இருக்கிறது. இதில் நெசவாளர்களால் அவர்களின் கைத்திறனில் அழகுடன் சீரான நெசவிலும் பல வண்ணத்தில் நெய்யப்பட்ட கைத்தறி இரகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த சிறப்பு கண்காட்சி அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.