நெல்லையில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி

நெல்லை, நவ. 1: தேசிய  ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட  வருவாய் அலுவலர் பெருமாள் தலைமையில் அரசு அலுவலர்கள், தேசிய ஒருமைப்பாட்டு  தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல  அலுவலர் சுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சசிகலா (வளர்ச்சி), மல்லிகா (சிறுசேமிப்பு), கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) வெங்கடாசலம், தாசில்தார்கள் தங்கராஜ், ஹபிபூர் ரஹ்மான்,  திருப்பதி, செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) மகாகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் துணைவேந்தர் பிச்சுமணி தலைமையில், பதிவாளர் (பொறுப்பு) பலவேசம், தொலைநெறி தொடர் கல்வி இயக்கக இயக்குநர் ராஜலிங்கம், நிதி அலுவலர் தவசுக்கனி ஆகியோர் முன்னிலையில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Related Stories: