நெல்லை, நவ. 1: தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமையில் அரசு அலுவலர்கள், தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சசிகலா (வளர்ச்சி), மல்லிகா (சிறுசேமிப்பு), கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) வெங்கடாசலம், தாசில்தார்கள் தங்கராஜ், ஹபிபூர் ரஹ்மான், திருப்பதி, செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) மகாகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.