ராஜபாளையத்தில் அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்

ராஜபாளையம், நவ. 1: ராஜபாளையத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15வது வட்ட கிளை பேரவை கூட்டம் நடந்தது. தலைவர் ஜெகஜோதி தலைமை வகித்தார். கூட்டத்தில் ராஜபாளையம் மக்கள் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெற சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் செல்லும் நிலையை மாற்றி சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு செய்ய மாற்ற வேண்டும், ராஜபாளையம் பகுதிக்கு மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், கொரோனா காலத்தில் அரசு அறிவித்த அகல விலைப்படி சரண்டர் விடுப்பு பறிப்பு- ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. இதில் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: