அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் விராலிமலை சத்குருசம்ஹார மூர்த்தி கோயிலில் அன்னாபிஷேகம்

விராலிமலை, நவ.1: விராலிமலையில் உள்ள சத்குரு சம்ஹார மூர்த்தி ஆசிரமத்தில் உள்ள ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. விராலிமலையில் சந்தைபேட்டை பகுதியில் வன்னி மரத்தடியில் சத்குரு சம்ஹாரமூர்த்தி கோயில் உள்ளது. இக்கோயில் நேற்று பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் உள்ள வன்னி ஈஸ்வரனுக்கும், மீனாட்சி அம்மன் மற்றும் பஞ்ச லிங்கங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்கர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.

Related Stories: