கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள், ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கரூர், நவ. 1: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியும், ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு விழிப்புணர்வு ஒருமைப்பாட்டு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் நேர்முக உதவியாளர் (பொது) சந்தியா, சமூக பாதுகாப்புதிட்ட தனித்துணை ஆட்சியர் ரசிகலா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Stories: