திருப்பூர், அக். 30: திருப்பூர் ஈ.பி.காலனி முருங்கை தோட்ட பகுதியில் சாய்ந்து அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ. முன்னாள் கவுன்சிலர் நடராஜன் கலெக்டர் விஜயகார்த்திகேயனுக்கு அனுப்பியுள்ள மனு:திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்திற்கு உட்பட்ட 11வது வார்டு ஈ.பி.காலனி முருங்கை தோட்ட பகுதியில் தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் எப்ேபாது கீழே விழுமோ என்கிற நிலையில் உள்ளது. மேலும், இதன் மின் கம்பிகள் அருகில் உள்ள மரங்களோடு உரசியவாறு உள்ளது. மழை காலம் தொடங்க உள்ள நிலையில், மின் கம்பியில் உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் மக்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர்.