புதியம்புத்தூர் மேலமடத்தில் ஆன்லைனில் திமுக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்

ஓட்டப்பிடாரம், அக். 30: ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கட்சியின் முப்பெரும் விழா மற்றும் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் புதியம்புத்தூர் மேலமடத்தில் நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆலோசனையின் பேரில் நடந்த இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த  ஒன்றியச் செயலாளர் இளையராஜா, ஆன்லைனில் திமுகவில் புதிதாக உறுப்பினராகச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோருக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.

கூட்டத்தில் நகரச் செயலாளர்கள்  புதியம்புத்தூர் லிங்கராஜ்,  ஓட்டப்பிடாரம் பச்சை பெருமாள், வர்த்தக அணி முத்துகுமார், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் அன்புராஜ், தங்கத்துரை பாண்டி, மாணவரணி ஜெயமுருகன், நிர்வாகிகள் ஜெபராஜ், சரவணன், ராஜா, அசோக்குமார், சிதம்பரம், அருள்ராஜ், ஹரிஹரன், சுப்பிரமணியன், செல்வகணேஷ், சாமுவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: