திருத்துறைப்பூண்டி, அக்.29: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூர் மாவட்ட நுகர்வேர் பாதுகாப்பு மைய தலைவர் வக்கீல் நாகராஜன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருத்துறைபூண்டி நகரத்தில் உள்ள தேசிய வங்கிகளின் ஏடிஎம்கள் சுலபமாக மக்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் பல ஏடிஎம் இயந்திரங்கள் இயங்கவில்லை. எந்த நோக்கத்திற்காக ஏடிஎம்கள் அமைக்கப்பட்டன, அந்த நோக்கங்கள் நிறைவேறாமல் பொதுமக்கள் நேரடியாக வங்கிகளுக்கு சென்று பணம் கொடுக்க வேண்டியதாக உள்ளது. இதனால் கூட்டம் அதிகமாக உள்ளது.