ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 50% இடஒதுக்கீடு கேட்டு விசி ஆர்ப்பாட்டம்

தஞ்சை, அக். 29: ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்ககோரி தஞ்சை ரயிலடி முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி தலைமை வகித்தார். அப்போது மருத்துவ கல்வியில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்ககோரி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நில உரிமை மீட்பு மாநில துணை செயலாளர் வீரன்.வெற்றிவேந்தன், தஞ்சை சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆதி.இலஅறிவுடைநம்பி, மாநகர செயலாளர் தமிழ் முதல்வன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அரங்க.குரு, விவசாய பாதுகாப்பு சங்க கலையமுதன், விவசாய பாதுகாப்பு இயக்கம் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: