ஊட்டி, அக். 29: ஊட்டி பழைய கார்டன் சாலையில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, காட்டுப் பன்றி போன்றவைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. அதிலும், காட்டுப்பன்றிகள் தற்போது நகர் புறங்களிலும் அதிகரித்துள்ளது. இவைகள் வளர்ப்பு பன்றிகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வரத்துவங்கியுள்ளன.