பழநி, அக்.28: பழநி பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1,000 சன்மானம் வழங்கப்படுமென காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழநி பகுதியில் நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, அடிவாரம், பாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகளவு நடைபெறுவதாக கூறப்படுகிறது. கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க காவல்துறை சார்பில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு நகரின் மையத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் மூதாட்டியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில் கஞ்சா விற்பனை பழநி பகுதியில் தங்கு தடையின்றி நடந்து வருவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை உயர் அதிகாரிகள் பல்வேறு நடைமுறைகளை கையாள அறிவுறுத்தினர்.