தேனி, அக். 23: தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகை தயாரிப்பவர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடந்தது. உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் நவநீதன் தலைமை வகிக்க, மாவட்ட ஹோட்டல் சங்க செயலாளர் வேல்முருகன், பொன்முருகன் முன்னிலை வகித்தனர். உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டிராஜின் வரவேற்றார். கூட்டத்தில் தரமான இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்வதற்கான வழிகாட்டுதல் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஒழுங்கு முறைகளை கடைப்பிடிப்பது குறித்து விளக்கப்பட்டது. அப்போது, இனிப்பு கார வகைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள் மைதா, சர்க்கரை, கடலை மாவு, பருப்பு வகைகள் எண்ணெய், நெய், டால்டா ஆகியவற்றின் தரம் தெளிவானதாக இருக்க வேண்டும், தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய்யை திரும்ப திரும்ப பயன்படுத்த கூடாது, செயற்கை நிறமூட்டிகள், எதுவும் பயன்படுத்தக்கூடாது,