ராஜபாளையம் அருகே புதிய கிணறுக்கு பூமிபூஜை

ராஜபாளையம், அக். 22: ராஜபாளையம் அருகே சமுசிகாபுரம் ஊராட்சிக்குட்பட்ட மில்கிருஷ்ணாபுரம் பகுதியில் ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான புதிய கிணறு அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்து, பணியை துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் ராஜகோபால், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் துரை கற்பகராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் நவமணி, முத்துலட்சுமி, ராஜேஸ்வரி அம்மாள், திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சரவணன் முருகன், ஞானராசு மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், கிராம மக்கள் கலந்து பலர் கொண்டனர்.

Related Stories: