செக்யூரிட்டி விஷம் குடித்து தற்கொலை

தேவதானப்பட்டி, அக்.21: தேவதானப்பட்டி அருகே நெஞ்சு வலி தாங்காமல் செக்யூரிட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி என்ற மச்சக்காளை(49). இவர் குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்தார். தனியார் வங்கியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சர்க்கரை  நோய், நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் சொந்த ஊரான மேல்மங்கலத்திற்கு வந்து தனியார் கிரசரில் செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்ந்தார். கடந்த வாரம் நெஞ்சு வலி தாங்காமல் விஷத்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மச்சக்காளை உயிரிழந்தார். ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: