ராஜ அலங்காரத்தில் அகிலாண்டேஸ்வரி மாநகர காவல்துறை சார்பில் காவல் கொடி நாள் கட்டுரைப் போட்டி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

திருச்சி, அக்.21: திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் காவல் கொடி நாளை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் “தேசிய கட்டமைப்பில் காவல்துறையின் பங்கு” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த கட்டுரை போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது கட்டுரையானது 1,000 முதல் 1,200 வார்த்தைகளுக்குள் இருக்கும்படி அனுப்ப வேண்டும். மேலும் கட்டுரை தமிழ் அல்லது ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கட்டுரை எக்காரணத்தைக் கொண்டும் முன்பு எந்த ஊடகத்திலும் வெளியிடப்பட்ட கட்டுரையின் பிரதிகளாக இருக்கக் கூடாது. படைப்புகளை பதிவேற்றம் செய்வதற்கான கூகுள் படிவத்தில் (https://forms.gle/esxhv9qj2UHyYQJE6) PDF வடிவில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும் அல்லது coptrc@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கையெழுத்து தெளிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டும். இந்த போட்டிகள் இரு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. பிரிவு 1ல் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும், பிரிவு 2ல் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையும் நடக்கிறது. படைப்புகளை வரும் 25ம் தேதி மாலை 6 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம். இந்த கட்டுரை போட்டியானது மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட உள்ளது. இத்தகவலை மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: