திருச்சி, அக்.21: திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் காவல் கொடி நாளை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் “தேசிய கட்டமைப்பில் காவல்துறையின் பங்கு” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த கட்டுரை போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது கட்டுரையானது 1,000 முதல் 1,200 வார்த்தைகளுக்குள் இருக்கும்படி அனுப்ப வேண்டும். மேலும் கட்டுரை தமிழ் அல்லது ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கட்டுரை எக்காரணத்தைக் கொண்டும் முன்பு எந்த ஊடகத்திலும் வெளியிடப்பட்ட கட்டுரையின் பிரதிகளாக இருக்கக் கூடாது. படைப்புகளை பதிவேற்றம் செய்வதற்கான கூகுள் படிவத்தில் (https://forms.gle/esxhv9qj2UHyYQJE6) PDF வடிவில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும் அல்லது coptrc@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.