தொண்டி, அக்.20: இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவேண்டும். குழந்தைகள் வீடுகளில் உள்ளனரா என்பதையும் வளர்ப்பு பிராணிகள் கொட்டிலில் உள்ளனவா என்பதை உறுதி செய்யவேண்டும். வீட்டிலுள்ள மின் மற்றும் மின்னணு சாதனங்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளனவா என உறுதி செய்தல் வேண்டும். இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ மரத்தடியிலோ உயர்மின் கோபுரங்கள் மற்றும் இரும்பு வேலிகளின் அருகில் நிற்பதோ தங்குவதோ கூடாது. கால்நடைகளை மரத்தில் கட்டுவதையோ, வெளியில் மேய்ச்சலுக்கு விடுவதையோ தவிர்க்க வேண்டும்.