மின்கம்பத்தில் கட்டி வைத்து வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி

திருப்பூர்,அக்.20: திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் மெடிக்கலில் மருந்து வாங்கி கொண்டிருந்தார். அப்போது அவரிடம் உறவினரிடம் பேச வேண்டும் செல்போன் தாருங்கள் என வாலிபர் ஒருவர் கேட்டுள்ளார். அதனை நம்பிய முதியவர் அவருடைய செல்போனை கொடுத்துள்ளார். பின்னர் செல்போனை வாங்கியதும், அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று செல்போனை வேறு நபர்களிடம் கொடுத்தார். பின்னர் முதியவர் கூச்சலிட்டதும் அங்குள்ள பொதுமக்கள் துரத்தி சென்று அந்த வாலிபரை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்த வந்த வடக்கு போலீசார் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அஜீத் (26) என்பதும், அவர் மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவந்தது. பின்னர் பொதுமக்கள் மற்றும் முதியவர் போலீசில் புகார் அளிக்காமல் அஜீத்தை அனுப்பி வைத்தனர்.

Related Stories: