தேவிபட்டிணத்தில் குப்பை சேகரிக்க புதிய வாகனங்கள்

ராமநாதபுரம், அக். 18:  ராமநாதபுரம் ஒன்றியம், தேவிபட்டிணம் ஊராட்சியில் குப்பை கழிவு சேகரிப்பு பணிக்காக தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் 4 புதிய பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டது. இதனை நேற்று மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார். இதில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கர் ராஜேந்திரன், அப்துல் ஜபார், ஊராட்சி மன்ற தலைவர் ஹமீதியா ராணி ஜாகீர்உசேன்

உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: