பரமக்குடி, அக். 18: அதிமுகவின் 49வது ஆண்டு துவக்க விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பரமக்குடி பஸ்நிலையம் அருகில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமை வகிக்க, மாநில மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் முன்னிலை வகித்தனர். பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, முத்தையா, நாகநாதன், அசோக்குமார், நகர் செயலாளர் அங்குசாமி, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் சரவணகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், பரமக்குடி ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வடமலையான், நகர இளைஞர் பாசறை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளை
ஞர் பாசறை துணை செயலாளர் தினேஷ், மாவட்ட மாணவர் அணி பொருளாளர் யோக மணிகண்டன், நயினார்கோவில் ஒன்றிய மாணவரணி செயலாளர் சத்தியேந்திரன், அரியாங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, கூட்டுறவு சங்க தலைவர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.