மதுரை, அக்.18: ‘வணிகர் பிரச்னைகளை எடுத்துச் சொல்ல இடம் வேண்டும்’ என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலத்தலைவர் முத்துக்குமார் தெரிவித்தார். மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கொரோனா காலத்தில் வாங்கிய கடனுக்கு இஎம்ஐ கட்ட வணிகர்களுக்கு 6 மாத கால அவகாசம் கொடுத்தனர். ஆனால், அதற்கு கூட்டு வட்டி கேட்கப்பட்டது. அதனை தள்ளுபடி செய்ய கோரி, ‘வரிகொடா போராட்டம்’ அறிவித்தோம். ஆனால் இதன்பேரில் வரும் 2ம் தேதி தீர்ப்பு வரலாம் என்பதால், தற்காலிகமாக இப்போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.