திருச்சி, அக். 18: லால்குடி தாலுகா அப்பாத்துறை ஊராட்சி தெற்கு சத்திரம் பகுதியை சேர்ந்த சாம்பசிவம் மனைவி நீலாவதி (55). விவசாய தொழிலாளி. இவர்களது மகள் சாந்தி (29) என்பவரை அருகில் உள்ள மேலவாளாடியில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 11.30 மணியளவில் தெற்கு சத்திரம் பகுதியில் இருந்து காய்கள் மற்றும் தின்பண்டங்களை வாங்கி கொண்டு மகளை பார்க்க மேலவாளாடிக்கு நீலாவதி சென்றார். அங்கு தண்டவாளத்தை கடந்து சென்றபோது சென்னையில் இருந்து திருச்சி வந்த எக்ஸ்பிரஸ் ரயில், நீலாவதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் ரயில்வே போலீசார், நீலாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சமயபுரம் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.