மணல் திருடிய மாட்டு வண்டி பறிமுதல்

கறம்பக்குடி, அக்.18:புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் ரோந்து சென்றபோது, அவ்வழியாக மணல் அள்ளிக்கொண்டு வந்த மாட்டு வண்டியை மணலுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்து கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: