பொள்ளாச்சி,அக்.18: 2021-ல் நடக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 65 சதவீத வாக்கு பெறும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியில் நேற்று நடந்த, அதிமுக 49வது ஆண்டு துவக்க விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா வழி நடத்தி வந்த அதிமுகவிற்கு எத்தனை தேர்தல் வந்தாலும் வாக்கு வங்கி குறையாது. மக்கள் ஆதரவு இருப்பதால், வரும் 2021ம் ஆண்டு நடைபெறம் சட்டமன்ற தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிமுக அமோக வெற்றிபெறும்.