ஆவடி, அக். 16: ஆவடியில் வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் பாலியல் தொல்லை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி, புதிய ராணுவ சாலையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (24) கூலி தொழிலாளி. இவரது வீட்டுக்க அருகில் 17வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். இவள், ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறாள். இந்நிலையில், கடந்த 11ந்தேதி மாணவி, சுரேஷ்குமார் வீட்டில் இருந்து அனைவரும் ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்று விட்டனர். பின்னர், மாணவி சர்சுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மாணவியால் வீட்டின் பூட்டை திறக்க முடியவில்லை. இதனை அடுத்து, மாணவி சுரேஷ்குமாரை உதவிக்கு அழைத்துள்ளார்.