சிவகங்கை, அக். 16: சிவகங்கை அருகே பணிகளை செய்ய விடாமல் ஆளும்கட்சியினர் மிரட்டுவதாக ஊராட்சி தலைவி, கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். சிவகங்கை ஒன்றியம் கீழப்பூங்குடி ஊராட்சி தலைவர் சண்முகவள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டி மற்றும் நிர்வாகிகளுடன் கலெக்டர் ஜெயகாந்தனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், கீழப்பூங்குடி ஊராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதாகும். இதில் நான் ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இந்த ஊராட்சியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த விடாமல் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு இடையூறுகளை செய்கின்றனர்.