காளையார்கோவில், அக்.16: காளையார்கோவில் அருகே பொது மயானம் இல்லாததால் சாலைவசதியில்லாத அடுத்த ஊருக்கு நெல்வயல் வழியே 3 கி.மீ தூரத்திற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் அவலம் தொடர்கிறது.
காளையார்கோவில் அருகே கிழவனூர் கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லை. இதனால் பக்கத்து ஊர் கண்மாய்மேட்டில் அடக்கம் செய்து வருகின்றனர்.