அண்ணா பல்கலை முன்பு திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், அக்.16: ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகம் முன்பு திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தை உயர் சிறப்பு அந்தஸ்து எனும் பெயரில் மத்திய அரசின் பிடியில் சேர்க்கும் முயற்சியை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், ராமநாதபுரம் ஒன்றிய நிர்வாகி ஜெர்மன் பிரபாகரன், மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜீவானந்தம், தவ்பிக் அலி, ராமநாதபுரம் நகர் செயலாளர் கார்மேகம், ஓய்வுபெற்ற வருவாய் அலுவலர் குணசேகரன், ராமநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் மனோகரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் குமரகுரு, சம்பத்து ராஜா, மாணவரணி துரைச்சாமி, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: