ஒற்றை இலக்க எண்ணுக்கு குறைந்த கொரோனா பாதிப்பு

சாயல்குடி, அக்.2:  ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.30 வரையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5,542 பேரில் 95.16 சதவீதம் பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை கடந்த மாதம் 3ம் தேதி 4,758 ஆக இருந்தது. படிப்படியாக குறைந்து செப்.30ம் தேதி மொத்த பாதிப்பு 5,542ஆக இருந்தது. இதில் 119 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் பாதிப்பு எண்ணிக்கை 784 ஆக இருந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு பிறகு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,551 ஆக உயர்ந்துள்ளது. 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: