ஊட்டி, அக்.2: முதுமலையில் காட்டு யானை மற்றும் புலி தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி பகுதியில் யானை மற்றும் புலி தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி மசினகுடியில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசால் ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. முதுமலை மசினகுடியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காட்டு யானை தாக்கி உயிரிழந்த செம்மநத்தம் கிராமத்தை சேர்ந்த பெள்ளியம்மாள் குடும்பத்திற்கு ஏற்கனவே முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகை அவரின் வாரிசுதாரர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.