துறையூர், அக்.1: துறையூர் ஊராட்சி ஒன்றியக்குழு அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் தமயந்திபிரபு முன்னிலை வகித்தனர். கடந்த 25ம் தேதி நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் எழுதும் நோட்டில் ஒன்றிய குழு தலைவரின் அனுமதி இல்லாமல் தீர்மானங்களை எழுதிய 4வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் அசோகன், 10வது வார்டு தேமுதிக கவுன்சிலர் சிவக்குமார் ஆகிய இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானம் கோரப்பட்டது.