தஞ்சை, அக். 1: தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி கொக்கேரி பகுதி விவசாயிகள் இப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி கும்பகோணம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக துணை மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமென உறுதியளித்ததன் அடிப்படையில் கொக்கேரி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் கடந்த 10 நாட்களாக 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து கொள்முதலுக்காக காத்து கிடக்கின்றனர்.